ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

தர்மபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் ரியாசுதீன். இவர் பேலஸ் தியேட்டர் அருகே டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இந்நிலையில், ஞாயிறு விடுமுறையை ஒட்டி இன்று தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஒகேனக்கல் அடுத்த ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ரியாஸ்சுதீனின் மனைவி அபிதா (38), மற்றும் அவரது குழந்தைகள் பாத்திமா (14) மற்றும் முகமது ரபாஸ் (9) ஆகியார் நீரில் மூழ்கி மாயமாகினர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

இதனால் அதிர்ச்சியடைந்த ரியாசுதீன் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேர தேடலுக்கு பின் நாடார்கொட்டாய் பகுதியில் அபிதாவின் உடலை மீட்டனர். மற்ற இருவரின் உடல்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.