3 கிலோ தங்கம் நூதன முறையில் கடத்தல் – இருவர் கைது

 

3 கிலோ தங்கம் நூதன முறையில் கடத்தல் – இருவர் கைது

லாக்டெளன் காலத்தில் தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு கரன்ஸி உள்ளிட்டவை கடத்தப்படுவது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இப்போதும் அப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

துபாயில் டூ எமிரேட் விமானமான ஈ கே 544 – ல் தங்கம் கடத்தப்படக்கூடும் என்ற செய்தி அதிகாரிகளுக்குக் கிடைத்தது. அதனால், சென்னை விமான நிலையத்திற்கு வருவோரைக் கண்காணிக்குப் பணி பலப்படுத்தப்பட்டது. பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்றதையும், அவர் வெளியே வந்ததற்கு பின், மற்றொருவரும் அதற்குள் சென்றதையும் சுங்கத் துறை அதிகாரிகள் கவனித்தனர்.

3 கிலோ தங்கம் நூதன முறையில் கடத்தல் – இருவர் கைது

இரண்டாம் நபர் வெளியே வந்தார். உடனடியாக, அவரை சோதனையிட்டார்கள் அதிகாரிகள். அவரது கால்சட்டைப் பைகளில் வெள்ளைப் பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்தனர். விமான நிலைய ஆணையத்தால் பணியமர்த்தப்பட்டுள்ள இன்ஃபோ சாஃப்ட் டிஜிட்டல் டிசைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளரான அவரது பெயர் நிழல்ரவி, 29, என்பது கண்டறியப்பட்டது. அவருக்கு முன்பு கழிவறைக்கு சென்ற நபர் நியமத்துல்லா ஹாதி, 35, என்று தெரியவந்தது.

அந்தப் பொட்டலங்களைத் திறந்து பார்த்த போது, அவற்றுக்குள் 3.2 கிலோ எடையுள்ள ரூ 1.66 கோடி மதிப்பிலான 24 கேரட் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

3 கிலோ தங்கம் நூதன முறையில் கடத்தல் – இருவர் கைது

ஞாயிறன்று துபாயில் டூ சென்னை வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 1.57 கிலோ எடையுள்ள ரூ 81.35 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அப்துல் நாசர் என்பவர் கைது செய்யப்பட்டார்

மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்புள்ள 4.77 கிலோ தங்கம் சுங்கச் சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலைய தனியார் ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.