பாலாற்றில் குளித்த 3 சிறுமிகள், நீரில் மூழ்கி மாயம்

 

பாலாற்றில் குளித்த 3 சிறுமிகள், நீரில் மூழ்கி மாயம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் குளித்த 3 சிறுமிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தும்பவனம் பகுதியை சேர்ந்தவர்கள் லட்சுமி (15), (பூர்ணி (15) மற்றும் ஜெயத்திரி (14). இவர்கள் மூவரும் குருவிமலை பகுதியில் உள்ள பாலாற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். பாலாற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும் நிலையில், கரையோரத்தில் குளித்த சிறுமிகள் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

பாலாற்றில் குளித்த 3 சிறுமிகள், நீரில் மூழ்கி மாயம்

அருகே இருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியாத நிலையில், இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாயமான சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தண்ணீரில் அடித்துசசெல்லப்பட்ட சம்பவம் தும்பவம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதுஎ