ஓடையில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பலி!

 

ஓடையில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பலி!

அரியலூர்

செந்துறை அருகே ஓடையில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகாதகர். இவரது மகள் சுடர்விழி(7). சுதாகரின் சகோதரர் ஜெயசீலன். இவருக்கு ஸ்ருதி (9) மற்றும் ரோகித்(6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சிறுவர்கள் மூவரும் இன்று வீட்டின் அருகேயுள்ள விவசாய தோட்டத்திற்கு மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள சின்ன ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூவரும் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

ஓடையில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி மூவரும் மூழ்கினர். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் நீரில் இறங்கி தேடியபோது, மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.