‘கணவன் குடும்பத்தை போட்டுத் தள்ளிய மனைவி’ உட்பட 3 பேர் கைது!

 

‘கணவன் குடும்பத்தை போட்டுத் தள்ளிய மனைவி’ உட்பட 3 பேர் கைது!

சென்னையில் கணவனின் குடும்பத்தை சுட்டுத் தள்ளிய மனைவி மற்றும் அவரது கூட்டாளிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 11ம் தேதி சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களுள் ஒருவரான ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தான், திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றினார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் இந்த கொலையை செய்த நிலையில், நேற்று முன்தினம் ஜெபமாலாவின் சகோதரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘கணவன் குடும்பத்தை போட்டுத் தள்ளிய மனைவி’ உட்பட 3 பேர் கைது!

அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெயமாலாவுக்கு அவரது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் குடும்பத்துடன் தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனிடையே சென்னையில் கொலை செய்த ஜெயமாலா, போலீசார் வலையில் சிக்காமல் டெல்லிக்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயமாலா, ராஜு ஷிண்டே, விகாஷ் ஆகிய 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக போலீசார் அளித்த தகவலின் பேரில் அவர்கள் பேரையும் டெல்லி போலீசார் கைது செய்ததால், மகாராஷ்டிராவில் இருந்து சென்னை போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.