தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது – 13 கிலோ கஞ்சா பறிமுதல்!

 

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது – 13 கிலோ கஞ்சா பறிமுதல்!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவுப்படி உட்கோட்ட டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் நேற்று போலீசார் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு வந்தனர்.

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது – 13 கிலோ கஞ்சா பறிமுதல்!

அப்போது, தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள முட்புதரில் இருந்த 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி முயன்றனர். உடனடியாக அவர்களை விரட்டிச் சென்று பிடித்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியை சேர்ந்த ஜெயராமன் (32), டூவிபுரத்தைச் சேர்ந்த காளியப்பன் (34) மற்றும் கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த கனகசபாபதி (25) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, 3 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.