வீட்டுக்குள் புதையல் இருக்கு! கிளப்பிவிட்ட ஜோதிடர்… அதன்பின் நடந்த விபரீதம்
பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி மாந்த்ரீக பூஜை செய்து வீட்டிற்குள் குழி தோண்டிய சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரபு, ஐஸ் வியாபாரம் செய்துவருகிறார். ஜோதிடத்தின் மீது அலாதி நம்பிக்கை கொண்ட இவர், ஜோதிடர் ஒருவர் உங்களது வீட்டில் புதையல் இருக்கிறது எனக் கூறிய பொய்களை நம்பி, நண்பரின் உதவியுடன் வீட்டில் குழி தோண்ட முடிவு செய்தார். தொடர்ந்து பரமத்திவேலூரை சேர்ந்த பூசாரி ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து பூஜை செய்து குழி தோண்ட ஆரம்பித்தனர். மூன்று நாட்களாக இரவும், பகலுமாக சுமார் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டியுள்ளனர். ஆனால் புதையல் கிடைக்கவில்லை
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் புதையல் இருப்பதாக கூறி வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டியதாக 7 பேரிடம் விசாரணை நடந்த நிலையில், பரமத்திவேலூர் பூசாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர் வெள்ளியங்கிரி, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.