அமைச்சருக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகள்… சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

 

அமைச்சருக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகள்… சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

நடந்து முடிந்த தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செயல்பட்ட புதுக்கோட்டை அதிமுக பிரமுகர்களை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலின் போது அதிமுக பிரமுகர்களுக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஆலங்குடி தொகுதி வேட்பாளர் தர்ம தங்கவேலை மாற்ற வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.பாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், அவருக்கு பதவி வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டார். தர்ம தங்கவேலை மாற்றாததால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக சிலர் செயல்பட தொடங்கினர்.

அமைச்சருக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகள்… சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட நெவளிநாதன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் மனுவை வாபஸ் பெற்றார். இதைத்தொடர்ந்து, விஜயபாஸ்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சரின் மகள் தனலட்சுமி தேர்தலில் போட்டியிட்டார். அவர் மனுவை வாபஸ் பெறாமலேயே தேர்தலையும் சந்தித்தார்.

அமைச்சருக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகள்… சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செயல்பட்ட புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மாசிலாமணி, கே.ஆர்.கணேசன், தனலட்சுமி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் கட்சியில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.