3வது காதலனுடன் சுற்றியதால் ஆத்திரம்;கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொன்ற 2வது காதலன்

 

3வது காதலனுடன் சுற்றியதால் ஆத்திரம்;கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொன்ற 2வது காதலன்

திருவள்ளூர் மாவட்டத்தில் வெங்கல் அடுத்த மென்னவேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி பிரியங்கா, ராஜ்குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

3வது காதலனுடன் சுற்றியதால் ஆத்திரம்;கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொன்ற 2வது காதலன்

திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள நார்த்தவாடா கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், ஜேசிபி ஓட்டுநராக இருந்து வருகிறார். கார்த்திக்கின் உறவு பிடிக்காமல் ராஜ்குமாருடன் நிரந்தரமாக வாழ முடிவெடுத்த பிரியங்கா, கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு போவது மாதிரி சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து ராஜ்குமாருடன் சென்று, திருவாலங்காட்டில் வாடகை வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

3வது காதலனுடன் சுற்றியதால் ஆத்திரம்;கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொன்ற 2வது காதலன்

ஜேசிபி ஓட்டிக்கொண்டு ராஜ்குமார் வெளியூர் சென்ற நேரங்களில், வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவுக்கு வேறொரு நபருடன் காதல் மலர்ந்திருக்கிறது. இது ராஜ்குமாருக்கு தெரிந்ததும், இருவருக்கு சண்டை வந்திருக்கிறது. இதனால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் பிரியங்கா.

பிரியங்காவை தேடி சென்ற ராஜ்குமார், அவரை சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். ராஜ்குமாரும் தன்னை மன்னித்து அழைத்து செல்வதாக நினைத்து அவர் பின்னாலேயே சென்றிருக்கிறார் பிரியங்கா. ஆனால், வீட்டிற்குள் சென்றதுமே, பிரியங்காவின் கைகளை கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு, தயாராக வைத்திருந்த கூல்டிரிங்சில் விசத்தை கலந்து, பிரிங்காவின் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார் ராஜ்குமார். இதில், உயிரிழந்தார் பிரியங்கா.

3வது காதலனுடன் சுற்றியதால் ஆத்திரம்;கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொன்ற 2வது காதலன்

தன் மனைவி தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று போலீசுக்கும் போன் போட்டு சொல்லிவிட்டார் ராஜ்குமார். போலீசும் நம்பிவிட்டது. ஆனால், சண்டை போட்டுக்கொண்டு வந்து மீண்டும் சமாதானம் ஆகி சென்ற மகள் இறந்து பற்றி பிரியங்கா தாய் சந்தேகம் எழுப்ப, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டதில், ராஜ்குமார் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.