3.0 வரலாம்..! ரோபோவின் அடுத்த வெர்ஷனுக்கு ஸ்கெட்ச் போட்ட ஷங்கர்!

 

3.0 வரலாம்..! ரோபோவின் அடுத்த வெர்ஷனுக்கு ஸ்கெட்ச் போட்ட ஷங்கர்!

‘2.0’ திரைப்படத்தை தொடர்ந்து ‘3.0’ படம் எடுக்க சில யோசனைகள் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘2.0’ திரைப்படத்தை தொடர்ந்து ‘3.0’ படம் எடுக்க சில யோசனைகள் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சத்யம் திரையரங்கில் இன்று நடந்த ‘2.0’ டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்தை இந்தப் படத்தில் வசீகரனாக , சிட்டியாக, 2.0 என ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் உள்ளது. சைன்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதால் டைட்டிலும் அதன் சாயலில் இருக்க வேண்டும் என்று 2.0 என டைட்டில் வைக்கப்பட்டது.

எத்தனை அதிக வேலை பழு இருந்தாலும் ரசிகர்களின் உற்சாகம் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. சிறு சிறு யோசனைகள் இருக்கிறது, 3.0 உருவாகவும் வாய்ப்புள்ளது. பார்க்கலாம்என தெரிவித்துள்ளார்.

எந்திரன் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. அடுத்து 3ம் பாகம் என்றால் எத்தனை ஆண்டுகளாகும் என்பதை காட்டிலும் அதற்கு எத்தனை செலவாகும்? யாரு அதை தயாரிப்பார்கள்? என்பன போன்ற பல யோசனைகள் நெட்டிசன்களுக்கு தோன்றிவிட்டது.