‘3.0’-க்கு ரெடியா?: சிட்டியின் அடுத்த வெர்ஷனுக்கு ப்ளான் போடும் ஷங்கர்!

 

‘3.0’-க்கு ரெடியா?: சிட்டியின் அடுத்த வெர்ஷனுக்கு ப்ளான் போடும் ஷங்கர்!

‘2.0’ திரைப்படத்தை தொடர்ந்து ‘3.0’ படம் எடுக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘2.0’ திரைப்படத்தை தொடர்ந்து ‘3.0’ படம் எடுக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீசானது. ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் மற்றும் கோலிவுட்டினரிடையே நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் இப்படம் உருவானது. ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உருவான இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

2point0

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் யோசனையில் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். அடுத்த பாகத்திற்கான கதை பற்றி சில யோசனைகள் உதித்துள்ளது. சிட்டியாக ரஜினி சார் நடித்தால் மட்டுமே ‘3.0’ சாத்தியமாகும் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.

வசீகரன், சிட்டி, 2.O என பல்வேறு பரிமாணங்களை நடித்த ரஜினிகாந்த் வெளிப்படுத்தினாலும், சிட்டி கதாபாத்திரம் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிக ரசிகர்களை கவர்ந்தது. ஆகையால் மூன்றாம் பாகத்தில் ரஜினிகாந்த் சிட்டியாக நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்பது இயக்குநர் கருத்து மட்டும்மல்ல ரசிகர்களின் கருத்தும் அதுவே.

எந்திரன் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. அடுத்து 3ம் பாகம் என்றால் எத்தனை ஆண்டுகளாகும் என்பதை காட்டிலும் அதற்கு எத்தனை செலவாகும்? யாரு அதை தயாரிப்பார்கள்? என்பன போன்ற பல யோசனைகள் நெட்டிசன்களுக்கு தோன்றிவிட்டது.