3 மாத குழந்தையை விற்ற தாத்தா, பாட்டி : மீட்டுத் தரக் கோரி பெற்றோர்கள் புகார் !

 

3 மாத குழந்தையை விற்ற தாத்தா, பாட்டி : மீட்டுத் தரக் கோரி பெற்றோர்கள் புகார் !

அவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிப் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை அடுத்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ராஜாவும் மீனாவும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிப் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

marriage

அதன் பிறகு, ராஜாவும் மீனாவும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வாழ்த்து வந்துள்ளனர். திருமணம் ஆன பிறகு மீனா வீட்டில் அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

Baby

இரண்டு மாதங்களுக்கு முன்னர், மீனாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மீனாவின் பெற்றோரிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் படி கொடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, மீனாவின் உடல் சரியானதால் குழந்தையை மீண்டும் கொடுக்கும் படி கேட்டுள்ளனர். அப்போது, மீனாவின் பெற்றோர் குழந்தை இல்லை என்றும் 3 லட்சம் ரூபாய்க்குச் சென்னையில் வசிக்கும் ஒரு தம்பதியிடம் விற்று விட்டதாகவும் கூறியுள்ளனர்.

Raja meena

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா மற்றும் ராஜா காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மீனாவும் ராஜாவும் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். ராஜாவும் மீனாவும் செய்துக் கொண்ட காதல் திருமணம் பிடிக்காமல், மீனாவின் பெற்றோர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.