3 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அராஜகம்! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

 

3 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அராஜகம்! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக இன்று நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக இன்று நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், “சென்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி இந்தியன் டோ படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இதற்காக இன்று எங்கள் தலைவர் அவர்களை சாட்சி என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு வரவழைத்து மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும் விபத்து நடந்த இடத்திலிருந்து 4 நொடிகளுக்கு முன்பு தான் தலைவர் அவர்கள் அந்த இடத்திலிருந்து சென்றுள்ளார். இந்த மனவேதனையுடன் பிப்ரவரி 21ஆம் தேதி எங்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா எதிலும் தலைவர் பங்கேற்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இனி மேற்கொண்டு நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் காப்பீடு செய்து தரவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிக்கையாக கொடுத்துள்ளார். 60 வருட சினிமா துறையில் 250 படங்களுக்கு மேல் நடித்து வரும் எங்கள் தலைவர் சினிமா துறையை சார்ந்த அனைத்து ஊழியர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்.

kamal

1980ஆம் ஆண்டு ரசிகர் மன்றம் வேண்டாம் என்று ஒதுக்கி மக்களுக்கு நல்ல செயல்களையும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் எங்கள் தலைவர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை பெற்று மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளோம்.எங்கள் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு காவல் துறை மூலமாக சாட்சி என்கிற பெயரில் மூன்று மணி நேரம் இன்று விசாரணை நடத்தி உள்ளார்கள் தமிழக அரசை இந்த செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும் தலைவர் மீது சிறு துரும்பு பட்டாலும் எங்கள் லட்சக்கணக்கான இயக்கத் தோழர்கள் அவருக்கு அரணாக நின்று பாதுகாப்போம் என்று தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.