3 பெண் குழந்தைகள் மீது அமர்ந்து நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை : தெலுங்கானாவில் நடந்த பயங்கரம்!

 

3 பெண் குழந்தைகள் மீது அமர்ந்து நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை : தெலுங்கானாவில் நடந்த பயங்கரம்!

இதனால் கடந்த 5 ஆம் தேதி முகமது ஃபயாஸ்  மனைவி தனது குழந்தைகளுடன் அண்ணன்  வீட்டுக்கு சென்றுள்ளார். 

தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஃபயாஸ். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். முகமது ஃபயாஸ்  மதுவுக்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாக இருந்துள்ளார். இதனால் மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு குழந்தைகளை அடித்து கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் கடந்த 5 ஆம் தேதி முகமது ஃபயாஸ்  மனைவி தனது குழந்தைகளுடன் அண்ணன்  வீட்டுக்கு சென்றுள்ளார். 

ttn

இதையடுத்து அங்கு சென்ற முகமது ஃபயாஸ்  மனைவியை தன்னுடன் வந்து சேர்ந்து வாழ வருமாறு கேட்க நீ வேலைக்கு சென்று, குடிக்காமல் இருந்தால் தான் உன்னுடன் வருவேன் என அவரது  மனைவி சொல்ல, சரி இனி நான் வேலைக்கு செல்கிறேன் என்று உறுதியளித்துவிட்டு, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்  முகமது ஃபயாஸ். 

ttn

இந்நிலையில் சிறிது நேரத்தில் அப்பா மீண்டும் அடிக்கிறார் என கூறிக்கொண்டே மகன் மட்டும் வீட்டுக்கு ஓடிவர, பதறிப்போன  முகமது ஃபயாஸ் மனைவி மற்ற குழந்தைகளைத் தேட துவங்கியுள்ளார். அப்போது  ஃபயாஸ் ஈரமான துணிகளுடன் தண்ணீர் தொட்டி இருந்த பகுதியிலிருந்து வந்துள்ளார். இதை கண்டதும் குழந்தைகள் எங்கே என்று கேட்டதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

ttn

இதனால் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் மீது இருந்த  கோபத்தில் 3 மகள்களையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததாகவும்,  மகள்கள் தப்பிவிட கூடாது என அவர்கள் மீது அமர்ந்து நீரில் மூழ்கடித்தேன் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதன்பிறகு 3 குழந்தைகளையும் போலீசார் சடலங்களாக மீட்டனர். இந்த சம்பவம்  மத்தியில் பெரும் கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.