3 நாட்கள் மனைவியின் சடலத்துடன் இருந்த கணவன்…அதிர வைக்கும் சம்பவம்!

 

3 நாட்கள் மனைவியின் சடலத்துடன் இருந்த கணவன்…அதிர வைக்கும் சம்பவம்!

இறந்தது  கூட தெரியாமல் அவரது கணவர்  அதே வீட்டில் மூன்று நாள் இருந்துள்ளார். இதனால் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. 

கொல்கத்தாவைச் சேர்ந்த நயினா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாரதி சந்தா. இவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். 50 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நல குன்றியதில் படுக்கையிலேயே கிடந்துள்ளார். இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி பாரதி  சந்தா இறந்ததாகத் தெரிகிறது. ஆனால்  மனைவி இறந்தது  கூட தெரியாமல் அவரது கணவர்  அதே வீட்டில் மூன்று நாள் இருந்துள்ளார். இதனால் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. 

ttn

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டுக்குள் நுழைந்து பாரதி சந்தாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ttn

இறந்த அப்பெண்ணின் கணவருக்கு மனநிலை சரியில்லை என்பதால்  தான் அவருக்கு மனைவி இறந்தது கூட தெரியவில்லை என்று அப்பகுதி வாசிகள் சோகத்துடன் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.