3 நாட்களாக பள்ளி மாணவிகளுடன் பாலியல் பலாத்காரம்! அதிர வைத்த திடீர் காதலர்கள்!

 

3 நாட்களாக பள்ளி மாணவிகளுடன் பாலியல் பலாத்காரம்! அதிர வைத்த திடீர் காதலர்கள்!

தமிழகத்தில் செக்ஸ் புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. இப்படி கிளம்பும் பாலியல் புகார்களில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சிக்குவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கண்ணகி நகரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவிகள், பள்ளிக்குச் சென்ற நிலையில், மாலையில் வீடு திரும்பவில்லை.

தமிழகத்தில் செக்ஸ் புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. இப்படி கிளம்பும் பாலியல் புகார்களில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சிக்குவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கண்ணகி நகரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவிகள், பள்ளிக்குச் சென்ற நிலையில், மாலையில் வீடு திரும்பவில்லை. மகள்களை காணாமல் அவர்களது பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டு, பின்னர் காணாமல் போன மகள்கள் குறித்து கண்ணகி நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இது குறித்து கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக காணாமல் போன மாணவிகளை தேடி வந்தனர். காணாமல் போன மாணவிகள் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், மாணவிகளின் வீடு, பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமிராக்களை சோதனையிட்டனர். அதில், காணாமல் போன இரண்டு மாணவிகளும் வீட்டின் அருகிலேயே ஒரு ஆட்டோவில் ஏறி ஒன்றாகச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. 

kanagaraj

பின்னர் போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணையை துவக்கினர். போலீசாரின் விசாரணையில் மாணவிகள் ஏறிச் சென்ற ஆட்டோ சென்னை காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோ ஓட்டுநர் கனகராஜின் செல்போன் எண்ணை கொண்டு அதன் சிக்னலை ஆய்வு செய்தனர். கனகராஜுன் செல்போன் சிக்னல், திருப்பூர், கும்பகோணம் நெடுஞ்சாலையில் கனகராஜ் பயணித்துக் கொண்டு இருப்பதைக் காட்டியது. இதனையடுத்து சென்னையிலிருந்து கும்பகோணம் விரைந்த தனிப்படை போலீசார் அங்கு உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆட்டோ ஓட்டுநர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் ஆகியோருடன் மாயமான 2 பள்ளி மாணவிகளையும் பிடித்தனர். பின்னர் நான்கு பேரையும் கண்ணகி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

school girls

சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி தேர்வில், சரியான தேர்வெழுதாமல் இரண்டு மாணவிகளும் தோல்வியடைந்துள்ளனர். இதனால் இரண்டு மாணவிகளும் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் இந்த மாணவிகளுக்கு ஆட்டோ ஓட்டுநர் கனகராஜும், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விஜயகுமாரும் பழக்கமாகியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மாணவிகளைக் காதலிப்பதாகக் கூறியுள்ளனர். முன்பின் தெரியாத இவர்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறியவுடன், இரண்டு மாணவிகளும் உடனடியாக இருவரின் காதலையும் ஏற்றுள்ளனர். இதையடுத்து, இருவரையும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 3 நாட்களாக கும்பகோணம், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் அழைத்துச் சென்றுள்ளனர். 
திருப்பூர், கும்பகோணம் என்று ஊர் ஊராக திடீர் காதலர்களுடன் சுற்றித் திரிந்த மாணவிகளும், அவர்களுடன் விடுதி அறையில் தங்கி தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கும் ஆட்பட்டுள்ள அதிர்ச்சி செய்தி போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகளை மீட்டு, ஆட்டோ ஓட்டுநர்களான கனகராஜ் விஜயகுமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.