‘3 ஆம் வகுப்பு மாணவிக்கு லவ்லெட்டர் எழுதுனானுங்க…ஆனா நாங்க கட்டிபோடல’ : தலைமை ஆசிரியரை கதற வைத்த மாணவர்கள்!

 

‘3 ஆம் வகுப்பு மாணவிக்கு லவ்லெட்டர் எழுதுனானுங்க…ஆனா நாங்க கட்டிபோடல’ :  தலைமை ஆசிரியரை  கதற வைத்த மாணவர்கள்!

மாணவர்கள் சேட்டை செய்ததால் தலைமை ஆசிரியர் இவ்வாறு தண்டனை கொடுத்ததாகத் தகவல் வெளியானது. 

ஆந்திரா கத்ரி நகரின் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி என்பவர் மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சார்ந்த இரண்டு மாணவர்களை பெஞ்சில் கட்டிப்போட்டு உட்கார வைத்ததாகப் புகைப்படத்துடன்  செய்தி வெளியானது. மாணவர்கள் சேட்டை செய்ததால் தலைமை ஆசிரியர் இவ்வாறு தண்டனை கொடுத்ததாகத் தகவல் வெளியானது. 

ttn

ஆனால்   இதை மறுத்துள்ள பள்ளி நிர்வாகமோ, ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் மூன்றாம் வகுப்பு நண்பனோடு சேர்ந்துகொண்டு மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான்.  இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி போய் அவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் அளித்தோம். அவர்கள் தான்  ஆத்திரத்தில் மாணவர்களைக்  கட்டி போட்டார்கள். நாங்கள் எதுவுமே செய்யல’ என்று தெரிவிக்கின்றனர். 

ttn

எது எப்படியோ இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர், கல்வித் துறை, குழந்தைகள் நல ஆணையம் வரை சென்று தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடந்து வருகிறது.

 

tt

லவ் லெட்டர் எழுதுனவனுங்க இந்நேரம் ஜாலியா ஐஸ்கிரீம், சாக்லெட் சாப்பிட்டு கிட்டு இருப்பானுங்க போல.  அடேய்.. நீங்க நல்ல வருவீங்கடா…