3 ஆண்டுகளாக யோகி பாபு இழுத்தடிக்கிறார்: தயாரிப்பாளர் குற்றச்சாட்டால் சரணடைந்த யோகி பாபு

 

3 ஆண்டுகளாக  யோகி பாபு இழுத்தடிக்கிறார்: தயாரிப்பாளர் குற்றச்சாட்டால் சரணடைந்த யோகி பாபு

ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த படத்திற்கு டப்பிங் பேசாமல் இழுத்தடிக்கும் யோகிபாபு, விரைவில் டப்பிங் பேசித்தர வேண்டும்’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார். 

3 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த படத்திற்கு டப்பிங் பேசாமல் யோகி பாபு இழுத்தடிப்பதாகப் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

நடிகை த்ரிஷா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் பரமபத விளையாட்டு. திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ttn

ஆந்த வகையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ” ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு காரணம்  இயக்குநர்  தான். நடிகர்கள் ஆரம்பத்திலிருந்ததை போல கடைசி வரை இருக்க வேண்டும். ஒரு மரம்  கூட நட்டு வைப்பவர்களுக்குப் பயன் தருகிறது. ஆனால்  நடிகர் அப்படி இல்லை. தயாரிப்பாளருக்கு உதவிய நடிகர் சந்தானத்திற்கு நன்றி. ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த படத்திற்கு டப்பிங் பேசாமல் இழுத்தடிக்கும் யோகிபாபு, விரைவில் டப்பிங் பேசித்தர வேண்டும்’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார். 

ttn

குஜராத்தில் அரண்மனை 3 படப்பிடிப்பில் நடித்து வரும் யோகி பாபு, கே. ராஜனை தொடர்பு  கொண்டு ஒன்னும் பிரச்னையில்லை  சார். பண்ணிதந்துடுறேன்  என்று கூறியுள்ளார். இதையடுத்து சூரமங்கலத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கே. ராஜன், ‘பரமபத விளையாட்டு விழாவுல நான் பேசுனதை கேட்டு யோகி பாபு தம்பி படம் பண்ணி தரேன்னு சொல்லிடுச்சி. தம்பிக்கு ரொம்ப நன்றி’ என்று கூறி இந்த சர்ச்சைக்கு எண்டு கார்டு போட்டுள்ளார்.