3 அடி மலைப்பாம்பு வளர்ப்பு… ‘தல அஜித்’ வீட்டில் வனத்துறை அதிரடி சோதனை?!

 

3 அடி மலைப்பாம்பு வளர்ப்பு… ‘தல அஜித்’ வீட்டில் வனத்துறை அதிரடி சோதனை?!

படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் இவரின் படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள்.

ttn

தல அஜித் – ஷாலினி தம்பதிகளுக்கு அமோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சென்னை திருவான்மியூர் வீட்டில் வசித்து  வருகிறார். 

ttn

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டில் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை   வளர்த்து வந்துள்ளனர்.அதற்கு எலிகளை உணவாக கொடுத்து வந்துள்ளார். இந்த செய்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்று சுரேஷ் சந்திரா குறித்து விசாரித்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பு குறித்தும் சோதனை செய்ததாகவும்,  இதையடுத்து சுரேஷ் சந்திராவிடமிருந்து மலைப்பாம்பை கைப்பற்றியதாகவும் அவர் மீது வனவிலங்கு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 

இதுகுறித்து கூறியுள்ள சென்னை வனச்சரகர் மோகன், ‘அஜித் வீட்டில் ரெய்டு நடந்ததாக வந்த தகவல் பொய்யானது. சமூக வலைதளங்களில் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா  வீட்டில் பாம்பு வளர்க்கப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் இதுவரை அதுபற்றி வழக்குப்பதிவோ, விசாரணையோ, வாரண்டோ பெறப்படவில்லை’ என்று விளக்கமளித்துள்ளார்.