3வது நாளாக தொடரும் நிர்மலாவின் அறிவிப்பு! – இன்று சேவைத் துறை என தகவல்

 

3வது நாளாக தொடரும் நிர்மலாவின் அறிவிப்பு! – இன்று சேவைத் துறை என தகவல்

பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடியில் பொருளாதார நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மூன்றாவது நாளாக பொருளாதார நலத்திட்ட உதவிகளை அறிவிக்க உள்ளார்.
பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடியில் பொருளாதார நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முதல் நாள் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும், இரண்டாவது நாள் விவசாயிகள், தொழிலாளர்களுக்குமான பொருளாதார உதவி திட்டத்தை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

nirmala-sitha

உதவி என்பதை விட கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார் என்று சொல்லலாம். 
இந்த நிலையில் இன்று சேவைத் துறையினருக்கு இன்று நிர்மலா சீதாராமன் பொருளாதார உதவித் திட்டங்களை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுற்றுலா, ஹோட்டல், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இதனால் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.