3வது டி20 போட்டி: இந்தியா-இலங்கை இன்று பலபரிச்சை! தொடரை கைப்பற்றுமா இந்தியா?

 

3வது டி20 போட்டி: இந்தியா-இலங்கை இன்று பலபரிச்சை! தொடரை கைப்பற்றுமா இந்தியா?

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் பலபரிச்சை மேற்கொள்கின்றன. இந்த போட்டியில் வெல்லப்போவது யார்?.இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியை இந்தியா அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் பலபரிச்சை மேற்கொள்கின்றன. இந்த போட்டியில் வெல்லப்போவது யார்?.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியை இந்தியா அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது.

india3d t20

இதையடுத்து, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி 10ஆம் தேதி புனேவில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

3வது போட்டியை இந்திய அணி  வென்றால், தொடரை கைப்பற்றலாம். அதேநேரம் இலங்கை அணி வெல்லும் பட்சத்தில் இந்திய அணியிடம் அதன் சொந்த மண்ணில் தொடரை சமன் செய்து நல்ல நிலையில் வெளியேறலாம் என்ற முனைப்பில் களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

3d t20

இந்திய அணி சுழல்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகிறது. ஆனால், இலங்கை அணியில் வேப்பந்துவீச்சு சற்று தடுமாற்றம் கண்டுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுக்க முடிகிறது. அனுபவ வீரர் மற்றும் கேப்டன் மலிங்கா விக்கெட் எடுக்க இயலாமல் திணறுகிறார்.

ஆனால், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான பும்ராஹ் மற்றும் நவதீப் சைனி இருவரையும் எதிர்கொள்ள இலங்கை வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால், 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தொடரை 2-0 என வெல்லும் என கணிக்கப்படுகிறது.

இந்திய அணியில் எவ்வித மாற்றமும் தேவை இல்லை. இருந்தபோதும், மாற்றம் நிகழ்ந்தால் சுழல்பந்துவீச்சில் செய்யப்படலாம் என யூகிக்கப்படுகிறது.