3டி-யில் உருவாகிறது சந்தானத்தின் ஹாரர் ஹிட் திரைப்படம்!

 

3டி-யில் உருவாகிறது சந்தானத்தின் ஹாரர் ஹிட் திரைப்படம்!

நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ‘3’ படத்தை 3டி-யில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ‘3’ படத்தை 3டி-யில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2016ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ஹிட் அடித்த திரைப்படம் ‘தில்லுக்கு துட்டு’. லொல்லு சபா இயக்குநர் ராம்பாலா இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து கருணா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி என்று பல காமெடி நடிகர்கள் நடித்திருந்தனர். ஹாரர், காமெடி படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படமும் முந்தைய பாகத்தைப் போலவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, இதன் மூன்றாம் பாகத்தை எடுக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  

dd2

இந்த நிலையில் மூன்றாம் பாகம் வரை வந்திருப்பதால் தொழில்நுட்பத்தில் அசத்த வேண்டும் என்று 3டியில் எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  18 ரீல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செளத்ரி, இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். மேலும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

dd2

தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.