’’சாஹித்பாவ்லா 2 முறை ஸ்டாலினை சந்தித்த ரகசியத்தை காப்பாற்ற…’’

 

’’சாஹித்பாவ்லா 2 முறை ஸ்டாலினை சந்தித்த ரகசியத்தை காப்பாற்ற…’’

தாராபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’’திமுகவின் இளவரசர்.. கட்சியில் மூத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு பதவி வாங்கி விட்டார்’’ என்று உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையானது. ’’மோடி எத்தனை மூத்த தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு குஜராத் முதல்வராக வந்தார் தெரியுமா? பிரதமராக வந்தார் தெரியுமா?’’ என்று சொல்லிவிட்டு, ’’முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் நரேந்திரமோடியின் சித்திரவதையின், அழுத்தம் காரணமாகத் தான் மரணம் அடைந்தார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையானது.

’’சாஹித்பாவ்லா 2 முறை ஸ்டாலினை சந்தித்த ரகசியத்தை காப்பாற்ற…’’

உதயநிதியின் இந்த பேச்சுக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி பக்ஷி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

’’சாஹித்பாவ்லா 2 முறை ஸ்டாலினை சந்தித்த ரகசியத்தை காப்பாற்ற…’’

இந்நிலையில் மோடியை விமர்சனம் செய்ததற்காக, ‘’சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி பற்றி பேசும் உதயநிதியே, 2ஜி வழக்கில் சாஹித்பாவ்லா உங்கள் தந்தை ஸ்டாலினை 2 முறை சந்தித்த ரகசியத்தை காப்பாற்ற தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்ட சாதிக்பாட்சா குறித்து விவாதிக்கலாமா? அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டது குறித்து பேச தயாரா? என்கிறார் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.

மேலும், ‘’கலைஞர் டி.வியில் எப்போதோ டைரக்டராக இருந்து ராஜினாமா செய்துவிட்ட உங்கள் அத்தை கனிமொழி மீது பழியை போட்டுவிட்டு அவர் பின்னால் உங்கள் மொத்த குடும்பமும் ஒளிந்து கொண்டு தப்பித்தது குறித்து விவாதிக்கலாமா? பலன் அடைந்தது ஒருத்தர் பலிகடா ஆக்கப்பட்டது ஒருத்தர் என்பது போல் உங்கள்அத்தை கனிமொழி மீது பழியை போட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு உங்கள் குடும்பம் தப்பித்த கதைக்கு விளக்கம் இருக்கா உங்களிடம்? விவாதிக்க நான் தயார்! நீங்கள் தயாரா உதய நிதி?’’என்றும் கேட்கிறார் காயத்ரி.