தெலுங்கானா என்கவுன்டர் -2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

 

தெலுங்கானா என்கவுன்டர் -2 மாவோயிஸ்ட்கள்  சுட்டுக் கொலை

தெலுங்கானா எல்லைப்பகுதியில் நடை பெற்ற என்கவுன்டரில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

தெலுங்கானா என்கவுன்டர் -2 மாவோயிஸ்ட்கள்  சுட்டுக் கொலை

தெலங்கானா,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 15 நாளாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போலீசார் தெலங்கானா மாநிலம் குமரம் பீம் ,ஆதிலாபாத் ஆகிய மாவட்டங்களில் ஊடுருவ முயன்ற மாவோயிஸ்டுகளுக்கும் போலீஸாருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.

தெலுங்கானா என்கவுன்டர் -2 மாவோயிஸ்ட்கள்  சுட்டுக் கொலை

இந்த துப்பாக்கி சூட்டில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த என்கவுன்டர் குறித்து விசாரணை நடை பெறுகிறது