கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய 2-வது மனைவி கைது

 

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய 2-வது மனைவி கைது

ராசிபுரம் அருகே நெசவு தொழிலாளியை கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, தற்கொலை என நாடகமாடிய இரண்டாவது மனைவியை போலீசார் கைதுசெய்தனர்.ராசிபுரம் வி.நகர் பாப்பாத்திகாடு பகுதியை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி சரவணன் (48). இவருக்கு மல்லிகா, சரசு ஆகிய இரு மனைவிகள் உள்ளனர்.

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய 2-வது மனைவி கைது

அனைவரும் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்த நிலையில், சரவணனுக்கு புதுவீடு கட்டியதால் ஏற்பட்ட கடன் தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவு வீட்டின் மாடிக்கு சென்ற சரவணன் கொடியில் காயவைத்த சேலையில் கழுத்தை நெரித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய 2-வது மனைவி கைது

சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்திய ராசிபுரம் கிராம நிர்வாக அலுவலர், உயிரிழந்த சரவணன் உடலில் காயம் இருந்தால், சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீஸார் வழக்குபதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில், சரவணின் 2-வது மனைவி சரசு, சொத்துப் பிரச்சினை காரணமாக தலையில் கம்பியால் அடித்ததில் கணவர் உயிரிழந்துவிட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாக தெரிவித்தார். இதனையடுத்து, கொலை வழக்கு பதிவுசெய்து சரசுவை கைதுசெய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய 2-வது மனைவி கைது