பொன்மலையில் 2ம் நாள் முற்றுகை போராட்டம்!அசம்பாவிதம் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

 

பொன்மலையில் 2ம் நாள் முற்றுகை போராட்டம்!அசம்பாவிதம் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

பொன்மலை பணிமனையில் வட மாநிலத்தவர்களை அதிகளவில் பணியாற்றுவதை கண்டித்து தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் 2ம் நாளாக முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடைபெற்றது.

பொன்மலையில் 2ம் நாள் முற்றுகை போராட்டம்!அசம்பாவிதம் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திலும் வட இந்தியர்களை வேலைக்கு அமைத்து தமிழக இளைஞர்களை புறக்கணித்துள்ளது என்றும், குறிப்பாக பொன்மலை பணிமனையில் 531பேர் பணியமர்த்தப்பட்டதில் 400க்கும் மேற்பட்டோர் வடமாநிலத்தவர்கள். தொடர்ந்து ரயில்வேயில் இதுபோன்ற நிலை தொடர்ந்து வருகிறது.

பொன்மலையில் 2ம் நாள் முற்றுகை போராட்டம்!அசம்பாவிதம் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய அரசு பணிகளில் 90 சதவீதமும், மாநில பணிகளில் 100 சதவீதம் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். மேலும் மற்ற மாநிலங்களை பின்பற்றி தமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்தும் தமிழருக்கு முன்னுரிமை என்பதனை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு நேற்று முதல் ஒரு வார காலம் மறியல் போராட்டம் நடத்திட தலைவர் பெ.மணியரசன் சார்பில்

பொன்மலையில் 2ம் நாள் முற்றுகை போராட்டம்!அசம்பாவிதம் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

அறைகூவல் விடுக்கப்பட்டது. அதன்படி இரண்டாம் நாளான இன்று தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் பல்வேறு தமிழ் உணர்வாளர்கள் என மாணவிகள் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிமனை முன்பு எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.