மதுரை: சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலி

 

மதுரை: சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அலங்காநல்லூர் அடுத்த கொண்டையம்பட்டி பகுதியில் இருந்து வாடிப்பட்டி நோக்கி நேற்று நள்ளிரவில் 4 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

மதுரை: சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலி


அவர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட சசிகுமார், பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த சந்தன கருப்பு மற்றும் நவீன்சங்கர் ஆகியோர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவலின் பேரில் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிய அலங்காநல்லூர் போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.