கன்னியாகுமரி: இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
Oct 29, 2020, 18:03 IST1603974808000
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா கடத்திவந்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். நாகர்கோவில் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கோட்டார் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கோட்டார் போலீசார், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த செல்வவிஜய் மற்றும் நெல்லையை சேர்ந்த சண்முகம் ஆகியோரை கைதுசெய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். இதனிடையே குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தது
குறிப்பிடத்தக்கது.