’’வாக்கு எண்ணிக்கை மே- 2ம் தேதி நடைபெறுவது வேதனை அளிக்கிறது’’

 

’’வாக்கு எண்ணிக்கை மே- 2ம் தேதி நடைபெறுவது வேதனை அளிக்கிறது’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அரக்கோணம் இரட்டை கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

’’வாக்கு எண்ணிக்கை மே- 2ம் தேதி நடைபெறுவது வேதனை அளிக்கிறது’’

பின்னர் அரக்கோணத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறுவது வேதனை அளிக்கிறது. தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணப் படுவதால் இந்த ஒரு மாதத்திற்குள் அரசு செயல் படாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று வேதனை தெரிவித்தார்.

’’வாக்கு எண்ணிக்கை மே- 2ம் தேதி நடைபெறுவது வேதனை அளிக்கிறது’’

மேலும், ’’பாஜக போட்டியிடும் தொகுதியில் ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரைக்கும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று அதிருப்தியை தெரிவித்தவர், ’’தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியை மக்கள் வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் ’’ என்றார்.