தர்மபுரி: நகைக்காக மூதாட்டி கொலை – நகைப்பட்டறை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

 

தர்மபுரி: நகைக்காக மூதாட்டி கொலை – நகைப்பட்டறை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

தர்மபுரி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில், நகைப்பட்டறை உரிமையாளர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி அருகேயுள்ள பிடமனேரியை சேர்ந்தவர் முத்தம்மாள்(76). இவரது 2 மகன்களுக்கும் திருமணமான நிலையில், குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால், முத்தம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய தர்மபுரி பி-1 போலீசார், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

தர்மபுரி: நகைக்காக மூதாட்டி கொலை – நகைப்பட்டறை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

இந்நிலையில், முத்தம்மாள் வீட்டின் அருகில் நகைப்பட்டறை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம்(45) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, சோமசுந்தரமும், அவரது உறவினார் குமார்(30) என்பவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து, நகையை திருடியது தெரியவந்தது. அத்துடன் மூதாட்டியிடம் தந்திரமாக பேசி, தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற சோமசுந்தரம், அங்கே குமாருடன் சேர்ந்து தலையணையால் முத்தம்மாளின் முகத்தில் அழுத்தி அவரை கொலை செய்ததும், பின்னர் நகைகளை பறித்துகொண்டு முத்தம்மாளின் உடலை ரகசியமாக தூக்கிச்சென்று அவர் வீட்டிலேயே போட்டு விட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்தபோலீசார், அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனர்