தர்மபுரி:குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: 2 குழந்தைகள் உயிரிழப்பு

 

தர்மபுரி:குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: 2 குழந்தைகள் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கிணற்றில் இருந்த இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டபோதும், அவரது 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி:குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: 2 குழந்தைகள் உயிரிழப்பு

அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி(30). இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள எச்.புதுப்பட்டியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவருடன் மணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத வயதுடைய ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கணவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார்.

தர்மபுரி:குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: 2 குழந்தைகள் உயிரிழப்பு

தற்போது செல்வி தன் தாய் வீட்டில் தங்கி இருந்தார். இன்று மாலை அச்சல்வாடி பகுதியில் ஒரு விவசாயக் கிணற்றில் செல்வி தத்தளித்தபடி இருந்தது தெரிய வந்தது. உடனே அப்பகுதி மக்கள் செல்வியை மீட்டனர். செல்வி கொடுத்த தகவலின்படி அவரது 2 குழந்தைகளும் கிணற்றில் இருப்பதை அறிந்து அரூர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 3 மணி நேரம் போராடிய நிலையில் 2 குழந்தைகளும் சடலமாகவே மீட்கப்பட்டன.

தர்மபுரி:குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: 2 குழந்தைகள் உயிரிழப்பு

செல்வி தற்கொலை செய்ய குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தாரா அல்லது தவறி 3 பேரும் கிணற்றில் விழுந்தனரா என்று அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.