தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து… விலை எவ்வளவு தெரியுமா?

 

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து… விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் அதே வேளையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக இந்திய மருந்து நிறுவனம் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனம் இணைந்து தயாரித்த 2DG கொரோனா மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து… விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனாவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை போராடிக் கொண்டிருந்த நிலையில், இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது பெரிதும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடித்தால், பாதிப்பு குறைவாக இருக்கும் நோயாளிகள் சீக்கிரம் குணமடைவார்கள என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், 2DG கொரோனா மருந்தின் விலை ஒரு பாக்கெட் ரூ.990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என அந்த மருந்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. 2DG கொரோனா மருந்தின் முதல் 10 ஆயிரம் தொகுதி அண்மையில் விற்பனைக்கு வந்த நிலையில், நேற்று இரண்டாவது தொகுதி விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.