’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

 

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

‘பஞ்சாயத்து ஆரம்பிக்கலாம். நடத்தலாம். அதுக்காக விடிய விடியவா… உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னே ஒண்ணு கிடையாதா… நீங்க எல்லாம் இரவு முழுக்க பேசிட்டே இருந்தா பிக்பாஸ் கேமராக்களை வாட்ச் பண்றவங்களுக்கு எப்பய்யா தூங்குவாங்க? அவங்க பாவமெல்லாம் சும்மா விடாது… ஆமாம்… சொல்லிபுட்டேன்.

28-ம் நாள் தொடர்ச்சி…

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

சுசித்ரா எல்லோருக்கும் எமோஜி கொடுத்ததும், ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் திடமானவங்க…  ஷிவானி தவிர வேற யாரும் அதைப் பத்தி கவலை படமாட்டாங்கனு நேத்து சொல்லியிருந்தேன் இல்லையா… ஆனா, நடந்துது என்னன்னா… ஷிவானிதான் அதை ஒரு பொருட்டாவே எடுத்தக்கல. பல பேரு சுசித்ராகிட்ட போய் நல்வாக்கு கேட்டுட்டு இருந்தாங்க.

சுசித்ராவும் பிக்பாஸ் வீட்டில் குறிசொல்லும் அக்காவாக பில்டப் பண்ணிச்சொல்லிட்டு இருந்தார். முதலில் வந்தது ரியோ. ‘உன்கிட்ட பந்து வந்ததும் எல்லோரும் சைலண்ட்டாகிட்டாங்க கவனிச்சியா’னு சுசி கேட்டதும், ‘ஆமா.. அது வெள்ளைக் காக்காவேதான்’ என்பதாக சரணடைந்தார்.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

டைனிங் மேஜையில் எல்லோரும் ஆஜராக புது கேப்டன் சம்யுக்தா, ‘நான் இப்ப என்ன சொல்றேன்னா.. எல்லோரும் ஒத்துமையா இருக்கணும்… குருப்பிஸமே இருக்கக்கூடாது’னு ஆரம்பித்தார். சரி அதுக்கு என்ன செய்யணும்? காலையில பல்லு துலக்கினதும், ஒருத்தருக்கு ஒருத்தர் கைக்கொடுத்தக்கணுமாம்… ஆஹா… கண்ணாடியைத் திருப்பி ஆட்டோ ஸ்டார்ட் பண்றீங்க… போகட்டும்… போகட்டும்.

நல்வாக்கு கேட்க அனிதா வராட்டி எப்படி? கரெக்டா ஆஜரானார். “யேய் என்னப்பா நீ அழுதுட்டு இருக்க… ஊருக்குள்ள உனக்கு என்னா பேரு இருக்கு தெரியுமா… நீ வந்தாலே அப்படியே மாஸா இருக்கு… செம ஸ்டார்ங்கான போட்டியாளரே நீதான்… நீ ஏன் அழுவுற கண்ணைத் தொட… சிரி… நல்லா இருக்கா இல்லையா” என ஏகத்துக்கு அனிதாவுக்கு ஏத்திவிட, பிக்பாஸ் லைட்ஸ் ஆஃப் பண்ணியும் பிரகாசமாக எரிந்தது அனிதா முகம். (இன்னிக்கு நல்ல தூக்கம்தான்… கனவுல பிக்பாஸ் கிரீடத்தோட வலம் வருவாங்க இல்ல)

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

இன்னொரு பக்கம், ‘உன்னை சுத்தமா பிடிக்கல’ என பாலாவிடம் எதற்கோ கத்திக்கொண்டிருந்தார் ஷனம். யாராவது லைட்டா சீண்டினா ருத்ரதாண்டவம் ஆடுவது பாலாவின் குணம், நீ இன்னிக்கு வெளியே போய்டுவேன்னு நினைச்சேன். ஏன் போகல’ என உச்சமாய் வெறுபேற்றிகொண்டிருந்தார்.

அனிதாவுக்கு கொடுத்த கால்ஷீட் முடிஞ்சிடுச்சு… அடுத்த ஆள் வரலாம்னு கிளினிக்கில் டாக்டர் மாதிரி காத்திருந்தார். ஆஹா…அர்ச்சனாவும் அன்புமகன் பாலா அண்ட் கோ வந்துட்டாங்களே…

‘பையனு சொல்லி, உங்களுக்கு எதிரா விளையாட விடாம பாலாவைப் பண்ணிட்டீங்க’னு அடுத்தது அர்ச்சனாவை திருவினார். ‘ஓ!… ஆ!…’ என எமோஷனாகி, ‘டேய் பாலா, நான் உனக்கு அன்பைக் கொடுக்குறேன்… நீ என்னை காலி பண்ணு’ என பாலாவிடம் சொல்லிவிட்டு, கேமராவைப் பார்த்து ‘முறுகலா ஒரு தியாகிப் பட்டம் பார்சல்’என்பதாக நோக்கினார்.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

மணி 12, 1, 2 என பிக்பாஸ் கத்திட்டு இருந்தார். அது கெடக்கட்டும் என சுசி வந்த வேலையில் மும்முரமாய் இருந்தார். கிச்சன் பக்கம் பாலா தீவிரமாக சுசியிடம் பேசிட்டு இருந்தார். சுசி ஏதோ சொல்ல, ‘என்ன ஷனம்கூட ஜாயிண்ட் பண்ணிப் பேசறாங்களா?’ என ஜெர்க் ஆனார். இல்லல… ஷிவானியும் ஷனமும் உன்னை பிரேக் பண்றாங்க. ஆனா, நல்லா இருக்கு என ஊதிக்கொண்டிருந்தார்.

விடியற்காலை 5 மணிக்கு பாலா, சுசி, சுரேஷ் பேசிட்டு இருந்தாங்க. வாலு படத்துல சந்தானம் ஒரு ஆள்கிட்ட விடிய விடிய மாட்டுவார்ல… அந்த நிலைமைதான் பிக்பாஸ் வீட்டுல கேமரா வாட்ச் பண்றவங்க நிலைமை. அப்போ, பாலா, மியுசிக்கல் சேர் விளையாட்டுல நானும் சம்யுக்தாவும் ப்ளான் பண்ணிதான் உங்களை ஜெயிக்க வெச்சோம்’ என்றதும் முதலில் சுரேஷ் ஏத்துகிட்டார். அப்பால, யோசிச்சு பார்த்ததுல ஆடியன்ஸ் தப்பா நினைப்பாங்களோ என அணத்தத் தொடங்கிட்டார்.

பிக்பாஸ் 29 வது நாள்

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

‘ஏன் மச்சி மண்டையில சுர்ங்குது’ என அலற விட்டார் பிக்கி. நேத்து நைட் ஷிப்ட் பார்த்தவங்களுக்கு ஒருநாள் லீவ் கொடுங்க பிக்பாஸ். வழக்கம்போல ரம்யா, கேபி, ஷிவானி டீம் செமையா ஆடினாங்க. விடிய விடிய பஞ்சாயத்து செய்தாலும் உற்சாகமாக தனியாக ஆடி ஸ்கோர் செய்யப் பார்த்தார் சுசி. இன்னொரு பக்கம் இப்பதான் போய் படுத்தேன் என்பதுபோல பாலா இழுத்துப் போத்திட்டு இருந்தார்.

பாலா தூங்கினால் சும்மா விடுவோமா… என ஷிவானி காலையிலேயே கடலையை ஆற்ற… ஸாரி.. ஸாரி கடமையை ஆற்ற போய் எழுப்பினார். ’உங்கள எழுப்ப கேப்டன் சொன்னாங்க’னு ஷிவானி சொல்ல, ஆமாம்.. ஆமாம் என தலையாட்டினார் சம்யுக்தா. சின்ன கெஞ்சல், சின்ன பேச்சு… என வேற ரூட்டில் போய்ட்டு இருந்தது.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

’விட்டுக்கொடுத்து விளையாடறது நல்லா இல்லம்மா. அதை புதுசா வந்த பொண்ணு முன்னால சொல்லிக்காட்டறான் இந்த பாலா’ என அணத்திட்டு இருந்தார் சுரேஷ்.

காட்சி மாற ‘இந்தக் கண்ணாடி கிளாஸ் உடையற வரைக்கும் பாட்டு பாடணும்’ என பாட்டு கிளாஸ் எடுத்துட்டு இருந்தார் ஆஜித். அங்கேதான் புகழ்பெற்ற சண்டைக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. எதற்காகவோ ஷனமை ‘தறுதலை’ என பாலா சொல்லிவிட, பிடித்துக்கொண்டார் ஷனம்.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

’சிட்டியே கோபப்படுது’ என்பதுபோல ஆஜித்தே கடுப்பாகி சத்தம் போட, ஷனம் வெளியேறினார். ஆஜித் சொல்லிக்கொடுத்ததை ஜித்தன் ரமேஷ், ஆஆஆஆரி பாட… உடைந்த கண்ணாடி ஆஜித் கையில் இருந்தது அல்ல… பிக்பாஸ் கேமரா லென்ஸ்.. சோதிக்காதீங்க ஐயா… சோதிக்காதீங்க!

கிச்சன் பக்கத்தில் சண்டை ஆரம்பிச்சாதான் நல்ல சகுனம் என்பது பிக்பாஸ் வீட்டில் ஒரு நம்பிக்கை. அப்படியே ஆரம்பிச்சார் ஷனம். ’தறுதலை’ன்னா என்னன்னு கேட்டதற்கு, ’எதுக்கு ஆகாத வேஸ்ட்’ என பதில் கிடைச்சதும், இதுக்காகத்தானே காத்திட்டு இருந்தேன் என ஷனம் பிடிபிடி எனக் கத்திக்கொண்டிருந்தார். ஆனா, பாலா ’இந்தத் தோசை நல்லா இருக்கு’ என கவனிக்காது வேலைகளைப் பார்த்தார். உச்சபட்சமாய் வார்த்தைகளை ஷனம் விட, அடிக்கவே ஓடி வந்தார் பாலா. அடப்பாவி, இவ்வளவு நேரம் கவனிக்காத மாதிரி நடிக்கவா செஞ்ச?

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

பாலாவுக்கும் ஷனமுக்கும் இடையே சம்யுக்தா ‘எனாப்… எனாப்’ என முடிவே இல்லாமல் கத்திக்கொண்டிருந்தார். பாலா சூடேறி கத்த ஆரம்பிச்சதும், ‘ஓகே நம்ம வேலை முடிஞ்சுது’ என ஓரங்கட்டினார் ஷனம். ஆனா, பாலா விடல, பெட் ரூம்க்கு போய் சண்டையை வளர்த்தார். அட்வைஸ் ஆரி சமாதானம் செய்ய வர, ‘போய் பெரியங்க இருந்தா அனுப்பிவிடுங்க” என்றே ரேஞ்சுல் உங்கள யாரு கூப்பிட்டா’ என கேவலாமாக இன்செல்ட் செய்தார் பாலா. ஆனாலும் அதை வழிச்சு எறிஞ்சிட்டே ‘ஒரு பொம்பள புள்ளைய எப்படி அவ இவன்னு சொல்லலாம்’னு நியாயத்தைக் கேட்டார். ஷனமோ ‘அவ இவ’னு சொன்னது பிரச்சனை இல்லை’ என்றதும், ’உங்களையெல்லாம் நம்பி எப்படிம்மா பஞ்சாயத்து பண்ண வர்றது’ ஆரி நொந்து வெளியேறினார்.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

ஐந்தாறு நிமிடங்கள் பெரிய மழை பெய்து ஓய்ந்ததைப் போல சத்தத்தோடு சண்டை முடிஞ்சுது.

கேபிரில்லாவிடம் விளையாட்டில் விட்டுக்கொடுத்தது பற்றி அணத்திட்டு இருந்தார். ஓஹோ என ரியாக்‌ஷன் காட்டினார் கேபி. சுரேஷ் வாகாக திரும்பிப் படுக்கும்போது ரம்யா கூப்பிட்டு ‘இந்தத் தக்காளி எல்லாம் கொழ கொழன்னு இருக்கு… ஏதாச்சும் பண்ணலாமா’னு கேட்க, ’அதெல்லாம் அழுகி வீணாப்போச்சு’னு சுசி சொல்ல சூடாகி வெளியேறினார் சுரேஷ்.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

‘எரிமலையை சுரண்டிப் பார்க்கிறாங்க சுசி… ஒரு அளவு வரைக்கும்தான் பொறுக்கும். அப்பறம் என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது’ எனும் ரேஞ்சில் சம்யுக்தாவிடம் எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தார் சுரேஷ்.

காட்சி மாற, சம்யுக்தா, ஷிவானி, சுரேஷ் பேசிக்கொண்டிருக்கையில், ‘ஆணும் பெண்ணும் சமம்தான். ஆனா, பொம்பள புள்ளன்னா கொஞ்சம் உசத்திதான். அதை போய் இப்படி சொல்லலமா?’ எனக் கோபமாகச் சொல்ல ஒன்றும் புரியல. சரி நமக்குத்தான் புரியலன்னு நினைச்சா, சம்யுக்தாவும் ஷிவானியும் என்ன சொல்றாரு இவர் புரியலையேன்னு தலையைச் சொறிஞ்சாங்க.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

போன வேகத்தில திரும்ப வந்த சுரேஷ், ‘இந்தப் பொண்ணை வெச்சு கண்டண்ட் எடுக்க சொல்லுதே அந்த அம்மா அது சரிதானா?’ என விஷயத்தை உடைச்சார் சுரேஷ். அதாவது ஷிவானி – பாலா ட்ராக் அப்படியே போகட்டும் என சுசி சொன்னதை சொல்லியிருக்காராம். ஆஹான்.

இந்த விஷயத்தை ஷிவானியும் பாலாவும் ஆஜித் முன்னே டிஸ்கஸ் பண்ண, ‘என்னாது…” என அதிர்ச்சியானார் ஆஜித். இன்னும் தெளிவாகக் கேட்க, சுரேஷிடமே வந்தார் ஷிவானி. அவர் இன்னும் புட்டு புட்டு அவர் ஸ்டைலில் வைத்தார்.

உண்மையில் ஷிவானிக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். வெளியே இப்படிப் பேசப்படும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் அல்லது இவ்வளவு சீக்கிரம் பேசப்படும் என எதிர்பார்க்க மாட்டார். இரண்டும் இல்லையெனில், அவருக்குள் அப்படியொரு எண்ணம் இல்லாதிருக்கலாம். ஓரிரு நாளில் அது தெரிந்துவிடும்.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

திங்கட்கிழமை சடங்கான ‘எவிக்‌ஷனுக்கு நாமினேட்’ செய்யும் திருவிளையாடலை ஸ்டார்ட் பண்ணினார் பிக்கி. அனிதாவை  சுரேஷ், அர்ச்சனா, ரியோ, ரமேஷ் ஆகியோர் நாமினேட் செய்தனர். சோம்ஸை ஆரியும் கேபியும் நாமினேட் செய்தார்கள்.

பாலாவை ரம்யா, சோம்ஸ், ஷனம், நிஷா ஆகியோரும், ஷனமை ரம்யா, ஆஜித், ஷிவானி, பாலாவும் நாமினேட் செய்தார்கள். ஆரியை ஆஜித், பாலா, ஷிவானி, ரமேஷ், சோம்ஸ், சம்யுக்தாவும், அர்ச்சனாவை ஆரி, கேபி, சுசியும் நாமினேட் செய்தார்கள். இப்படி மாற்றி மாற்றி ஓட்டுகளைக் குத்தினார்கள்.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

யாருக்கு எவ்வளவு ஓட்டு என லிஸ்டைத் தந்து எரியும் நெருப்பில் நெய் ஊத்தினார் பிக்கி. ஆரி 8, அனிதா 4, பாலா 4, ஷனம் 4, அர்ச்சனா 4, சோம் 3, சுரேஷ் 2 என சடங்கை முடித்து வைத்தார் பிக்கி. அர்ச்சனா எல்லோருக்கும் நன்றி சொல்ல, ‘என்னாது நான் நாமினேஷனில் இல்லையா… என்ன கேம் ப்ளான்னு புரியலையே’ என கிச்சு கிச்சு மூட்ட ட்ரைப் பண்னினார் ரியோ. வேணாம் பிரதர்… இதெல்லாம் ரொம்ப பழசு. அனிதா ரியாக்‌ஷன் காட்டலையே பிக்கி.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

எரிமலை வெடிக்கும்னு சுரேஷ் சொன்னார். ஆனா, வெடிச்சது ஆரியின் எரிமலை. காலையில பாலா நக்கலடித்ததில் துவண்டு போயிருந்தார். ’ரூமை க்ளீன் பண்ணலையா மேன்’ என்பதாக சம்யுக்தா கேட்க, மனுஷன் பொறிஞ்சி தள்ளிட்டார்.  ‘நான் கிச்சனைச் சுத்தம் பண்ணி வெச்சேன்ல.. அதுபோல போனவாரம் க்ளீனிங் டீம் சுத்தம் பண்ணிட்டு போயிருக்கணும்தானே…’ என்று சரியாகத்தான் கேட்டார்.

பழைய கிளீன் ரூமில் பாலா இருந்ததால் காண்டாகி விட்டார் போல. பழைய கிளீனிங் குரூப்பை கூப்பிட்டு ஒரு பஞ்சாயத்தை சம்யுக்தா ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை வளர்ந்திருக்காது. ‘நான் கேப்டனாக இருக்கும்போதோ இப்படியெல்லாம் சண்டை போடூவீங்க’னு டென்ஷனாகி கத்த, ஆரியின் கோபம் உடைய… ஒரே ரணகளம்தான். உங்களை போரிங் ஆளாக நான் செலக்ட் பண்றதை மனசுல வெச்சு சண்டை போட்டே ஆகணுனு பிடிவாதமா இருக்கீங்க… என கத்திவிட்டு சென்றார் சம்யுக்தா. ஆஹா.. புரோமோவுக்கு கண்டண்ட் தேறிடுச்சுன்னு பிக்பாஸ் எடிட்டர் ஹேப்பி.

’ஆரின்னா பொங்கல் சாப்பிடறவரு இல்ல… எரிமலையாய் பொங்குறவரு! பிக்பாஸ் 29-ம் நாள்

இந்த சீசன் பிக்பாஸ் பாதி நேரம் இங்கிலீஷ்லேயே ஓடுது. டப்பிங் பண்ற அந்த தம்பிக்கு / தங்கச்சிக்கு நிறைய வேலை கொடுக்கறீங்கனு ஒரே அழுகை. கமல் கவனத்துக்கு… அப்பறம் 90’ஸ் படங்களின் கடைசி ஷாட் போல தூரமாய் மனிதர்களைக் காட்டி பின்கதை வெள்ளைச்சாமியானார் பிக்பாஸ். சுபம்.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.