28ல் கூட்டணியை இறுதி செய்யும் அமித்ஷா

 

28ல் கூட்டணியை இறுதி செய்யும் அமித்ஷா

ஆறு திட்டங்களை தொடங்கிவைக்க கடந்த 14ம் தேதி சென்னை வந்தார் பிரதமர் மோடி. அவர் மீண்டும் வரும் 25ம் தேதி அன்று தமிழகம் வர இருக்கிறார். கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிறார்.

28ல் கூட்டணியை இறுதி செய்யும் அமித்ஷா

நேற்று முன் தினம் நேரு உள் விளையாட்டரங்கில் நிகழ்ச்சியை முடித்தபின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் 10 நிமிடங்கள் தனியாக பேசினார் மோடி. கூட்டணி குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. வரும் 25ம் தேதியும் முதல்வருடன் பிரதமர் பேச இருக்கிறார் என்கிறது பாஜக வட்டாரம்.
இதற்கிடையில் 19ம் தேதி நிர்மலா சீதாராமனும், 21ம் தேதி ராஜ்நாத் சிங்கும் தமிழகம் வர இருக்கிறார்கள். சேலத்தில் நடைபெறூம் நிகழ்வுக்காக ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார்.

28ல் கூட்டணியை இறுதி செய்யும் அமித்ஷா

இதையடுத்து 28ம் தேதி அன்று அமித்ஷா தமிழகம் வருகிறார். விழுப்புரத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் தமிழகம் வருகிறார்.

அநேகமாக அன்றைய தினமே அமித்ஷா கூட்டணியை இறுதி செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கமலாலயம் தரப்பினர்.