கணவனிடம் இருந்து விடுதலை பெற நினைத்து வழக்கறிஞரிடம் சிக்கிய பெண்: நிர்வாண படம் எடுத்து மிரட்டும் டார்ஜன்

 

கணவனிடம் இருந்து விடுதலை பெற நினைத்து வழக்கறிஞரிடம் சிக்கிய பெண்: நிர்வாண படம் எடுத்து மிரட்டும் டார்ஜன்

கணவனிடமிருந்து விடுதலை பெற நினைத்த பெண் வழக்கறிஞரிடம் சிக்கி அவதிப்பட்டு வந்துள்ளார். விவாகரத்து கேட்டு வந்த பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசமாக இருந்துவிட்டு, மிரட்டியே 7 லட்சம் பணம் கறந்துவிட்டு மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். பெண் துணிந்ததால் அந்த வழக்கறிஞர் போலீசில் பிடிபட்டிருக்கிறார்.

கணவனிடம் இருந்து விடுதலை பெற நினைத்து வழக்கறிஞரிடம் சிக்கிய பெண்: நிர்வாண படம் எடுத்து மிரட்டும் டார்ஜன்

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்த 43 வயதான பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்காக மணவாளநகர் அடுத்த திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு வழக்கறிஞர்களை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மணவாள நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த டார்ஜன், அப்பெண்ணிடம் வந்து, இந்த வழக்கை நானே எடுத்து நடத்துகிறேன் என்று சொல்லி வழக்கிற்கு தேவையான ஆவணங்களை அந்த பெண்ணிடமிருந்து கேட்டு பெற்றிருக்கிறார்.

அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு இது சம்பந்தமாக பைல் ரெடி பண்ணிவிட்டு உங்களை கூப்பிடுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் மறுநாள் அந்தப் பெண்ணுக்கு போன் பண்ணி மேலும் சில ஆவணங்களை கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு டார்ஜன் நானே வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

கணவனிடம் இருந்து விடுதலை பெற நினைத்து வழக்கறிஞரிடம் சிக்கிய பெண்: நிர்வாண படம் எடுத்து மிரட்டும் டார்ஜன்

போகும்போது ஆப்பிள் ஜூஸ் வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து எடுத்துச் சென்றிருக்கிறார். அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றதும் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட டார்ஜன், அப்பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் கொடுத்திருக்கிறார். அப்பெண்ணும் ஜூஸை குடித்துவிட்டு டார்ஜன் கேட்ட ஆவணங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்திருக்கிறார்.

பின்னர் உல்லாசமாக இருந்திருக்கிறார். அதன்பின்னர் புறப்பட்டு வந்துவிட்டார். மயக்கம் தெளிந்த பெண் ஆடை களைந்து நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி ஆகியிருக்கிறார். கணவரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று நினைத்து வழக்கறிஞரிடம் சிக்கி இப்படி சீரழிந்து விட்டோமே என்று நினைத்து அழுதிருக்கிறார்.

அதற்குள் அப்பெண்ணுக்கு போன் செய்து மூன்று லட்சம் பணம் உடனே தர வேண்டும் இல்லையென்றால் உன் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெண் கணவனை வீட்டாருக்கு தெரிந்தால் இது பெரிய பிரச்சனையாகி விடும் என்று பயந்து 3 லட்சம் பணம் கொடுத்திருக்கிறார்.

கணவனிடம் இருந்து விடுதலை பெற நினைத்து வழக்கறிஞரிடம் சிக்கிய பெண்: நிர்வாண படம் எடுத்து மிரட்டும் டார்ஜன்

பணத்தைப் பெற்ற பின் மீண்டும் நான்கு லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி இருக்கிறார். அதற்கும் வேறு வழியில்லாமல் பணத்தை புரட்டிக் கொடுத்து இருக்கிறார். அதன்பின்னரும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். டார்ஜன் மனைவியும் அப்பெண்ணுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் நொந்து போயிருந்த பெண் டார்ஜன் மனைவி மிரட்டலுக்குப் பின்னர் துணிந்திருகிறார்.

இனியும் பொறுத்திருக்க கூடாது என்று திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று டார்ஜன் பற்றிய முழு விவரங்களையும் சொல்லி புகார் அளித்திருக்கிறார். இது தெரிந்ததும் டார்ஜன் கொடைக்கானலில் சென்று தலைமறைவாகி விட்டார். ஆனால் போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் அவர் கொடைக்கானலில் இருப்பது தெரியவந்ததும், தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து கைது செய்துள்ளனர்.

கணவனிடம் இருந்து விடுதலைபெற கிடைத்த ஒரு பெண்ணுக்கு வழக்கறிஞரே ஒரு பெரும் தலைவலியாக இருந்தது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.