கொரோனா போல் மனிதருக்கு மனிதர் பரவுகிறதா மங்கி பி வைரஸ்? அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?

 

கொரோனா போல் மனிதருக்கு மனிதர் பரவுகிறதா மங்கி பி வைரஸ்?  அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?

கொரோனா வைரசின் அச்சம் இன்னமும் நீங்குவதற்குள்ளாகவே மங்கி பி வைரஸ் வேறு வந்து அச்சுறுத்துகிறது. ஆனால் ஒரு ஆறுதலான விசயம் என்னவென்றால், இந்த மங்கி பி வைரஸ் மனிதருக்கு மனிதர் பரவும் வகையை சேர்ந்தது அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதருக்கு மனிதர் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்கிற ஆறுதலோடு, 1932ம் ஆண்டில் இருந்து இந்த வைரஸ் உள்ளது. இதுவரைக்கும் 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த 50 பேரிலும் 21 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்கிற அறுதலையும் தருகிறது.

கொரோனா போல் மனிதருக்கு மனிதர் பரவுகிறதா மங்கி பி வைரஸ்?  அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?

மங்கி பி வைரஸ் பாதித்த குரங்கு ஒருவரை கடித்தாலோ, அல்லது நகங்களால் கீறினாலோ மங்கி பி வைரஸ் பரவும் என்கிறார்கள் மருத்துவர் நிபுணர்கள்.

மங்கி பி வைரஸ் பாதித்த குரங்கு நோய்வாய்பட்டு இறந்துவிடும். இந்த வைரஸ் பாதித்த குரங்கின் சிறுநீர்,மலம், உமிழ்நீர் ஆகியவற்றில் வைரஸ் இருக்கும். ஆனாலும் இது அவ்வளவு சுலபத்தில் மனிதர்களுக்கு பரவிவிடாது. வைரஸ் பாதித்த குரங்குகளிடம் மிக நெருக்கமாக இருப்போருக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.

விலங்குகளுக்கு சிகிச்சையைளிக்கும் மருத்துவர்கள், ஆய்வக பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் கடந்த மார்ச் மாதம் சீனாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் காய்ச்சல், தசை வலி பாதிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாதங்களில் உயிரிழந்தார். அவரது சளி, உமிழ்நீர், ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு மங்கி பி வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா போல் மனிதருக்கு மனிதர் பரவுகிறதா மங்கி பி வைரஸ்?  அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?

மங்கி பி வைரஸ் பாதித்தால் காய்ச்சல், தசை வலி, தலைவலி உண்டாகும். காயங்களில் கொப்புளங்கள் உண்டாகும். வயிற்றும் வலி உண்டாகும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். வயிற்றுப்போக்கும் அதிகமாகும். மூளை, தண்டுவடத்தில் வீக்கம் ஏற்படும். நரம்புக்கோளாறு, மூளை செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு உண்டாகும்.

மங்கி பி வைரசில் இருந்து தப்பிக்க, பொதுவாகவே குரங்கு கடித்தால் உடனே கடிபட்ட இடத்தினை சோப்பு போட்டு கழுவிவிட வேண்டும். 20 நிமிடங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றியபின்னர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.