பள்ளி மாணவிக்கும் மனைவியை பிரிந்து வாழ்ந்தவருக்கும் திருமணம்:பெற்றோர் தவிப்பு

 

பள்ளி மாணவிக்கும் மனைவியை பிரிந்து வாழ்ந்தவருக்கும் திருமணம்:பெற்றோர் தவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டர் வளையபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(45). இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் பிள்ளை இருக்கிறார்.

பள்ளி மாணவிக்கும் மனைவியை பிரிந்து வாழ்ந்தவருக்கும் திருமணம்:பெற்றோர் தவிப்பு

மனைவியை பிரிந்து வாழும் பழனிச்சாமி, பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி மீது பழனிச்சாமிக்கு ஒரு கண். அதனால் அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று மாணவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார்.

தன்னை திருமணம் செய்துகொண்டால் நன்றாக வாழலாம் என்றும் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டிருக்கிறார் பழனிச்சாமி.

பள்ளி மாணவிக்கும் மனைவியை பிரிந்து வாழ்ந்தவருக்கும் திருமணம்:பெற்றோர் தவிப்பு

இதற்கிடையில் மகளை காணவில்லை என்று கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர் பெற்றோர். போலீஸ் விசாரணையில் மாணவியை பழனிச்சாமி அழைத்துச்சென்றதும், சோமனூரில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று இருவரையும் அழைத்துக்கொண்டு வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்ததை பழனிச்சாமி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மகளின் இந்த திருமணத்தால் பெற்றோர் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.

14வயது பள்ளி மாணவியை 45 வயது நபர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.