உள்ளாட்சி தேர்தலில் தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்
Jul 15, 2021, 22:22 IST1626367936000
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க இனிமேலும் கால அவகாசம் வழங்க முடியாது. வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் நெல்லையில் செய்தியாளர்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’மீதமுள்ள பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.’’என்று தெரிவித்தார்.