நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: ’என் அப்பா என் மகனாக பிறந்திருக்கிறார்’ என்று உருக்கம்

 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: ’என் அப்பா என் மகனாக பிறந்திருக்கிறார்’ என்று உருக்கம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: ’என் அப்பா என் மகனாக பிறந்திருக்கிறார்’ என்று உருக்கம்

இதுகுறித்து அவர், ‘’18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் மிமிக்கிரி செய்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளந்திருக்கிறார். உறவுப்பெண் ஆர்த்தியை சிறுவயது முதற்கொண்டே காதலித்து வந்த சிவகார்த்திகேயன் அவரையே மணந்துகொண்டார். இத்தம்பதிக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: ’என் அப்பா என் மகனாக பிறந்திருக்கிறார்’ என்று உருக்கம்

போலீஸ் அதிகாரியான சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன், அவரே 18 ஆண்டுகளுக்கு பின்னர் மகனாக பிறந்துள்ளதாக உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.