’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

 

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

இந்து அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சாமிபடம் அருகிலேயே செருப்பை கழட்டி விட்டு பூமி பூஜை போட செல்கிறார். அமைச்சர்களும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைவரும் செருப்புடன் நிற்கும் புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

பாரத் இந்து முன்னணி அமைப்பு, “இனி இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க இவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை பாரத் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்துக் கடவுள்களை வணங்குங்கள் என்று உங்களை நாங்கள் கூறவில்லை. உங்களுடைய பகுத்தறிவு இருக்கட்டும் . இந்துக்கள் மனதை புண்படுத்தாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த சந்ததியினர் உங்களை மதிக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

’’நடிப்பதை தொழிலாக கொள்வதில் தவறில்லை. ஆனால், பொது வாழ்க்கையில் நடிப்பது குற்றம். நாத்திகராய் இருப்பது தவறில்லை. அவரவர் விருப்பம். ஆனால் பக்தர்களின் மனதை புண்படுத்துவது குற்றம். குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட நடிகரும்,சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்கள் செருப்பை அணிந்து கொண்டே பூமி பூஜையில் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்வதை திருந்த செய்ய வேண்டும். இல்லையேல் செய்யாதிருக்க வேண்டும். ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வருவாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.