பெண்ணை கடித்துக்கொன்ற அதே இடத்திற்கு மீண்டும் வந்த உயிரை விட்ட நல்லபாம்பு

 

பெண்ணை கடித்துக்கொன்ற அதே இடத்திற்கு மீண்டும் வந்த உயிரை விட்ட நல்லபாம்பு

பெண்ணை கடித்துக் கொன்ற அதே இடத்திலேயே வந்து உயிரை விட்டது நல்லபாம்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

பெண்ணை கடித்துக்கொன்ற அதே இடத்திற்கு மீண்டும் வந்த உயிரை விட்ட நல்லபாம்பு

வாழைத்தோட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வராணி. பெருமாள் விவசாய பணிகளுக்காக தன் வீட்டில் உர மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். நெடுநாட்களாக அடுக்கி வைத்திருந்ததால், இந்த மூட்டைகளுக்கு இடையில் ஒரு நல்ல பாம்பு வந்து வசதியாக படுத்துக்கொண்டது. கடந்த 20ஆம் தேதியன்று அந்த மூடைகளுக்கு அருகில் சென்று வேலை செய்துகொண்டிருந்த செல்வராணியை நல்ல பாம்பு கடித்தது.

பாம்பு கடித்ததில் அலறித்துடித்தார் செல்வராணி. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வந்ததும், விரைந்து ஓடி புதருக்குள் மறைந்து விட்டது பாம்பு. செல்வராணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி செல்வராணி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெண்ணை கடித்துக்கொன்ற அதே இடத்திற்கு மீண்டும் வந்த உயிரை விட்ட நல்லபாம்பு

செல்வராணி இறந்த எட்டு நாட்களுக்குப் பின்னர் உறவினர்களிடம் போலீசார் நின்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது புதருக்குள் சென்று மறைந்த அந்த நல்ல பாம்பு வெளியே வந்து வீட்டிற்குள் சென்று இருக்கிறது. இதை பார்த்துவிட்ட எல்லோரும் கம்பு எடுத்து அடிக்க தயாராகிவிட்டனர்.

பாம்பு உர மூட்டைகளுக்குள் சென்று நுழைய முற்பட்டபோது செல்வராணியை கடித்த அதே இடத்திற்கு சென்று அந்த இடத்தைவிட்டு நகர முற்பட்டபோது, அடித்துக் கொன்றனர்.