கணவர் வெளிநாட்டில்; தனியாக வசித்த புதுப்பெண்ணுக்கு இளைஞர்களால் ஏற்பட்ட கதி

 

கணவர் வெளிநாட்டில்; தனியாக வசித்த புதுப்பெண்ணுக்கு இளைஞர்களால் ஏற்பட்ட கதி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை அடுத்த திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழழகியை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் வெளிநாட்டில்; தனியாக வசித்த புதுப்பெண்ணுக்கு இளைஞர்களால் ஏற்பட்ட கதி

திருமணத்திற்குப் பின்னர் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தமிழழகி ஆவணம் அருகே இருக்கும் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அன்று ஆவணம் குடியிருப்பில் தமிழழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாலமுருகனுக்கு தகவல் போயிருக்கிறது. வெளிநாட்டில் இருந்த பாலமுருகன் என்ன செய்வதென்று அறியாது. தமிழழகி வீட்டிற்கு போன் செய்து இருக்கிறார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்திருக்கிறார் தமிழழகி.

மகளின் சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து செருவாவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழழகி வசித்துவந்த வீட்டில் ஆய்வு நடத்தினர். அப்போது தற்கொலைக்கு முன்பாக தமிழழகி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

கணவர் வெளிநாட்டில்; தனியாக வசித்த புதுப்பெண்ணுக்கு இளைஞர்களால் ஏற்பட்ட கதி

அந்த கடிதத்தில், தான் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்ந்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் , அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவு எடுத்துள்ளதாகவும் எழுதி வைத்திருக்கிறார். அந்த இளைஞர்கள் யார் யார் என்பதையும் எழுதி வைத்திருக்கிறார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தமிழழகிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தமிழழகிக்கு உடற்கூறு ஆய்வு முடிந்து விட்ட நிலையிலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் உறுதியாக இருப்பதால் தமிழழகியின் உடல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.