மனைவி வராததால் மச்சினியை அழைத்துசென்ற இளைஞர்…சிறிது நேரத்தில் மர்ம மரணம்

 

மனைவி வராததால்  மச்சினியை அழைத்துசென்ற இளைஞர்…சிறிது நேரத்தில் மர்ம மரணம்

குடும்பம் நடத்த மனைவி வரமாட்டேன் என்று தாய் வீட்டிலிருந்து கொண்டு பிடிவாதமாக சொல்லிவிட்டதால் மனைவியின் தங்கையை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த இளைஞர். அவர் அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த இளம்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்திருக்கிறது.

மனைவி வராததால்  மச்சினியை அழைத்துசென்ற இளைஞர்…சிறிது நேரத்தில் மர்ம மரணம்

அவர் தூக்கில் தொங்க வில்லை. கணவர் குடும்பத்தினர் தான் அடித்துக் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவிக்கிறார் இளைஞரின் மனைவி.

சென்னை மாதவரம் பகுதியில் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியர் தெருவில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இப்பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரனின் மகள் சரண்யா. இவருடைய சகோதரி மஞ்சு.

மனைவி வராததால்  மச்சினியை அழைத்துசென்ற இளைஞர்…சிறிது நேரத்தில் மர்ம மரணம்

சரண்யா தன் கணவர் கார்த்திக்குடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். மனைவியை சமாதானம் பேசி அழைத்துச் செல்ல வந்த கார்த்திக் அது முடியாது போகவே, வீட்டிற்கு திருப்பி இருக்கிறார். அப்போது கார்த்திக்குடன் 20 வயதான மஞ்சுவும் கார்த்திக் உடன் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்.

கொளத்தூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே, மஞ்சு தூக்கில் தொங்கி விட்டதாக தகவல் வந்திருக்கிறது. சரண்யா குடும்பம் நடத்த வர மாட்டேன் என்று அடம்பிடித்து வீட்டிலேயே இருந்த நிலையில், அவரின் சகோதரி மஞ்சு கார்த்திக்குடன் ஏன் பைக்கில் சென்றார் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.