பெரியார் சொன்ன குண்டூசியும் மோடி சொன்ன தடுப்பூசியும்..எச்.ராஜாவை விளாசும் ராஜீவ்காந்தி

 

பெரியார் சொன்ன குண்டூசியும் மோடி சொன்ன தடுப்பூசியும்..எச்.ராஜாவை விளாசும் ராஜீவ்காந்தி

தந்தை பெரியார், ’’வெள்ளைக் காரன் நமக்கு சுதந்திரம் கொடுத்தால் நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது’’ என்று தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, ’’இப்போது இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசியை 50 நாடுகள் வாங்கி விட்டன. மேலும் வாங்க 25 நாடுகள் வரிசையில் நிற்கின்றன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டி சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

பெரியார் சொன்ன குண்டூசியும் மோடி சொன்ன தடுப்பூசியும்..எச்.ராஜாவை விளாசும் ராஜீவ்காந்தி

இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா. தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராஜா, இதுகுறித்து கருத்து எதுவுமில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதாவது எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்பதை அப்படி சொல்லி இருக்கிறார்.

பெரியார் சொன்ன குண்டூசியும் மோடி சொன்ன தடுப்பூசியும்..எச்.ராஜாவை விளாசும் ராஜீவ்காந்தி

ராஜாவின் இந்த பகிர்வுக்கு, ’’சொந்த நாட்டு மக்களும் நீண்ட காலமாய் வரிசையில் நிற்கின்றனர். அந்த வெள்ளைகாரன் அவன் நாட்டில் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டுவிட்டான்!’’ என்று பதிலடி கொடுத்துள்ளார் திமுக மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி.

பெரியார் சொன்ன குண்டூசியும் மோடி சொன்ன தடுப்பூசியும்..எச்.ராஜாவை விளாசும் ராஜீவ்காந்தி

மேலும், ராஜாவின் பகிர்வுக்கு, உள்நாட்டில் எல்லாருக்கும் ஊசி போட்டாச்சா?, 50 நாட்டுக்கு கொடுக்கிற உங்களால ஏன் நம்ம நாட்டுக்கு மட்டும் முழுசா கொடுக்க முடியல, சொந்த நாட்டு மக்கள் 50% பேருக்கே இன்னும் போட்டு முடிக்க வக்கில்ல, இதுல 50 நாட்டுக்கு .., சொந்த நாட்டுல தடுப்பூசி போட வக்கில்லாம உட்காந்துட்டு இருக்கோம் அடுத்த நாடு கீயூவில இருக்கானாம், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு கேட்டோம். ஆனால் கொடுக்கவில்லை .ஒன்றிய அரசும் உற்பத்தி செய்யவில்லை தடுப்பு ஊசி தட்டுப்பாடு உள்ள நிலையில் எவ்வாறு தடுப்பூசி வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

பெரியார் சொன்ன குண்டூசியும் மோடி சொன்ன தடுப்பூசியும்..எச்.ராஜாவை விளாசும் ராஜீவ்காந்தி

அந்த எல்லா நிறுவனங்களையும் உருவாக்கியது காங்கிரஸ். அடுத்தவன் பிள்ளைக்கு இனிசியல் போட்டுக்க வெட்கமா இல்லையா, மருந்து தயாரித்த இடம் மட்டும் தான் இந்தியா, அதன் மூல பொருள் எல்லாம் நீர் சொல்லும் வெள்ளைக்காரனுடயது. சொந்த நாட்டு மக்களுக்கு ஊசி போடாமல் அதை வெளிநாட்டுக்கு அனுப்பிய மோடியை மன்னிக்க முடியாது என்று நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.