மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

 

மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 64,689 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்நிலையில் மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. அந்த வகையில் மதுரையில் இன்று மட்டும் 280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. புதிய பாதிப்புகள் சேர்த்து மதுரையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,703 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.