“28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

 

“28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன.

கடந்த 2 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழிற்கொள்கை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செய்யும் கொள்கை உள்ளிட்டவை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

“28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்நிலையில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை சென்னையில் இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை அடிப்படையில் கொள்கை இன்று வெளியிடப்படுகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையையும் வெளியிட உள்ளார் முதல்வர் பழனிசாமி.

“28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

இன்றைய நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழக அரசின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பழைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழிற்நிறுவனங்களின் தொழில் நிறுவன உற்பத்தியையும் இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். ஒரகடம், கும்மிடிபூண்டி ,மணப்பாறை ,தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் சிப்காட் தொழில் பூங்காவுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.