சேலை மாற்ற அறைக்குள் சென்ற புதுப்பெண்.. ஜன்னல் வழியாக பார்த்த கணவனுக்கு அதிர்ச்சி
சிதம்பரம் அருகே மருதூர் நத்தமேடு கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகள் மணிமேகலை(வயது27). பிஎஸ்சி நர்சிங் படித்துள்ள மணிமேகலை சென்னையில் ஒரு கண்ணாடி கடையில் கண் பரிசோதனை பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மணிமேகலைக்கும் குப்புசாமி என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் வரவேற்பிற்காக நேற்று மாலையில் பண்ருட்டியில் இருந்து கணவன் மற்றும் உறவினர்களுடன் மருதூர் நத்தமேட்டிற்கு சென்றார்.
தாய் வீட்டிற்கு சென்றதும் சேலை மாற்றிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றிருக்கிறார்.
நெடுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் கணவர் அறைக்குள் செல்ல கதவை திறக்க முயற்சித்தபோது , கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையத்து அவர் உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் பதறியடித்துகொண்டு ஜன்னலை திறந்து பார்த்தனர். அறைக்குள் மின் விசிறியில் தூக்கு போட்டு மணிமேகலை தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மணிமேகலை உடலை மீட்டனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமணமான இரண்டாவது நாளிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் இரு குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.