நண்பர்களின் கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்த முயற்சி; ரவுடி கொன்று புதைப்பு

 

நண்பர்களின் கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்த முயற்சி; ரவுடி கொன்று புதைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கலுக்கொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு. கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தேடப்பட்டு வந்த இவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். சேத்தன்,சந்தீப் நண்பர்களும் மஞ்சுவுடன் தலைமறைவாக இருந்துள்ளனர்.
போலீசுக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்தாலும் சகல சுகத்தையும் அனுபவித்து வந்துள்ளார்கள்.

நண்பர்களின் கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்த முயற்சி; ரவுடி கொன்று புதைப்பு

இந்த நிலையில் தனது கணவர் மஞ்சுவை காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். மஞ்சுவுடன் சுற்றி வந்த சேத்தனையும், சந்தீப்பினையும் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். அவர்களது பதிலில் சந்தேகம் கொண்டபோலீசார் துருவித்துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். மஞ்சுவை தாங்கள்தான் கொலை செய்து புதைத்தோம் என்றிருக்கிறார்கள்.

சேத்தனும் சந்தீப்பும் உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதை தெரிந்துகொண்ட மஞ்சு, அந்த பெண்ணிடம் சென்று பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். பணம் கொடுக்காவிட்டால் கள்ளத்தொடர்பை வெளியே சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்.

இதை சந்தீப்பிடமும், சேத்தனிடமும் சொல்லி அழுதிருக்கிறார் அப்பெண். இதனால் ஆத்திரப்பட்டவர்கள், மஞ்சுவை கொலை செய்து புதைத்துள்ளனர்.

மஞ்சுவை புதைத்த இடத்தை காட்டியதை அடுத்து அந்த இடத்தில் தோண்டி உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர் போலீசார்.