2வது மனைவியின் கை,கால்களை கட்டிப்போட்டு.. இரும்பு கம்பியை காய்ச்சி எடுத்து.. 3வது மனைவியால் நடந்த கொடூரம்

 

2வது மனைவியின் கை,கால்களை கட்டிப்போட்டு.. இரும்பு கம்பியை காய்ச்சி எடுத்து.. 3வது மனைவியால் நடந்த கொடூரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எம்.தண்டா கிராமத்தில் பாண்டியனை மணந்துகொண்டு 7 ஆண்டுகளாக அவருடன் குடித்தனம் நடத்தி வந்தார் கலைவாணி.
அண்மையில்தான் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவல் தெரியவந்தது கலைவாணிக்கு. முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம்செய்து, அதை இத்தனை வருடங்கள் சொல்லாமல் இருந்த கணவனிடம் சண்டை போட்டிருக்கிறார்.

2வது மனைவியின் கை,கால்களை கட்டிப்போட்டு.. இரும்பு கம்பியை காய்ச்சி எடுத்து.. 3வது மனைவியால் நடந்த கொடூரம்

தினமும் இது தொடர்பாக இருவருக்குள்ளும் சண்டை வந்ததால் பாண்டியன் வீட்டுக்கு வருவதை குறைத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் பாண்டியன் அறவே வீட்டுக்கு வராமல் போகவும், முதல் மனைவியுடன் சென்றுவிட்டார் என்று சந்தேகப்பட்டு தேடியபோதுதான், அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாண்டியனிடமும் மூன்றாவது மனைவியுடமும் சென்று சண்டை போட்டிருக்கிறார் கலைவாணி. எங்கே தன்னை பாண்டியனிடம் இருந்து பிரித்துவிடுவாரோ என்று பயந்த 3வது மனைவி, கலைவாணி பற்றி தவறாக சொல்லி வந்திருக்கிறார் பாண்டியனிடம்.

2வது மனைவியின் கை,கால்களை கட்டிப்போட்டு.. இரும்பு கம்பியை காய்ச்சி எடுத்து.. 3வது மனைவியால் நடந்த கொடூரம்

கலைவாணிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று 3வது மனைவி சொன்னதால், ஆத்திரத்தில் வீட்டுக்கு வந்தவர், கூல்டிரிங்சில் மயக்க மருத்து கலந்துகொடுத்து மயங்கம் அடையச்செய்துவிட்டார் பாண்டியன். பின்னர் கலைவாணியின் கை,கால்களை கட்டிப்போட்டுவிட்டு, இரும்பு கம்பியை காய்ச்சி எடுத்துவந்து அந்தரங்கள் பகுதிகள் உள்பட உடம்பில் 16 இடங்களில் சூடு வைத்துள்ளார்.

மயக்கம் தெளிந்த பின்னர் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, உடல் முழுவதும் காயங்களூடன், வலியுடன் அம்மா வீட்டுக்கு தப்பித்து சென்றுவிட்டார் கலைவாணி.

கணவன் பாண்டியனையும், மூன்றாவது மனைவியையும் பிடித்து தண்டனை கொடுக்குமாறு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.