பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த காங்., எம்.பி. ஜோதிமணி

 

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த காங்., எம்.பி. ஜோதிமணி

நான் தமிழ் மொழியின் பெரிய அபிமானி. உலகிலேயே பழமையான மொழியான தமிழின் , தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி நான் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழில் பேசி இதை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த காங்., எம்.பி. ஜோதிமணி

சென்னையை சேர்ந்த குரு பிரசாத் மன் கி பாத் உரையின் போது தமிழ்நாடு குறித்தும் தமிழ் மொழி குறித்தும் பிரதமர் பேசியதை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது உரையில் தெரிவித்த பிரதமர், ‘ MyGov’ தளத்தில் குருபிரசாத் பதிவிலிருந்து சில வரிகளை மேற்கொள்ள காட்ட விரும்புகிறேன். நீங்கள் தமிழ்நாடு பற்றிப் பேசும் போதெல்லாம் என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. தமிழ் மொழி, கலாச்சாரம், பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான இடங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள். மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாடு குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்களோ, அதனை ஒன்று திரட்டி மின் புத்தகம் ஒன்றை நான் தயார் செய்திருக்கிறேன். இதனை ’NamoApp’ ல் வெளியிட முடியுமா? என கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த காங்., எம்.பி. ஜோதிமணி

என்பதை சொல்லிவிட்டு, தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறையாது. உங்கள் வருங்கால முயற்சிகளுக்காக வாழ்த்துக்கள் என்று பிரதமர் சொன்னார் குரு பிரசாத்துக்கு.

இதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’ நன்றி பிரதமர் மோடி அவர்களே. ‘’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’அந்த பழமையான தமிழ் கலாச்சாரத்தின் மக்களாகிய எங்களுக்கு தாராளமாக தடுப்பூசி வழங்குங்கள். ஏன் தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? நாங்கள் இந்திய ஒன்றியத்தின் அங்கம் இல்லையா? உங்கள் அன்பு வெறும் வார்த்தைகளில் மட்டும்தானா?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.